Monday 13 May 2013

முற்றிலும் கற்பனை


இங்கே ஒருதலை காதலன் ஒருவன் காதலி தன்னிடம் வந்து காதலை சொன்னால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்கிறான். கவிதையின் சுவைக்காக கற்பனையை சேர்பது இயல்பு ஆனால் கவிதையையே கற்பனையாக எழுதி இருப்பது இந்த கவிதையின் சிறப்பு.

காதலனே
உனக்கு ஒரு
காதல் கடிதம்
எழுத நினைக்கிறேன்...
கைகளை விட கண்களே
அதிகம் எழுதுகின்றன
கவிதை வரிகளாக இல்லை
கண்ணீர் வரிகளாக
நனைந்து போகிறது
காகிதம்.

என் உள்ளத்தின் காதலை
உன்னிடம் உலர நினைக்கிறேன்
எனக்கோ
சொல்ல துணிச்சலில்லை
உனக்கோ
என் ஏக்கம் புரியவில்லை.
இரவு முழுதும்
உன் நினைவுகள் வந்து
உறக்கம் கெடுக்கிறது.
கண்ணீர் கசிந்து
கண்ணீர் கசிந்து
தலையணை நனைகிறது.

என் காதலா
நான் காத்திருப்பேன்
உன்னை மணக்கும் வரை
இல்லையென்றால்
மறிக்கும் வரை
காதலே என் காதலே
நீ வென்றுவிடு
இல்லையேல்
காலமே ஓ காலமே
என்னை கொன்று விடு...

No comments:

Post a Comment