அருசுவை விருந்தாய்,
அனைத்திற்கும் மருந்தாய்,
என் கவிதைக்கு காகிதமாய்,
ஆலயத்தில் ஒரு ஓவியமாய்,
எரிப்பதற்கு விறகாய்,
எரிந்தாலும் கறியாய்,
செதுக்கினால் சிலையாய்,
துளையிட்டால் குழலாய்,
வெயிலுக்கு நிழலாய்,
மழை கொட்டும் போது குடையாய்,
பயன்படும் மரத்தின் அடியில்
கோடரியாய் மனிதம்.
தன்னையே தரணிக்காய்
தாரைவார்பது மரங்கள்
தன்னோடு அதனையும்
சேர்த்தழிப்பது மனிதன்...
No comments:
Post a Comment