Sunday 28 April 2013

பேரழகு


கதிரவன் உதிக்கும்போதும்
கார்மேகம் சூழும்போதும்
அந்தி மாலை சிவக்கும்போதும்
அழகு நிலவு பிறக்கும்போதும்
வானம் அழகு

சேற்றில் தவளை தாவும்போதும்
செந்தாமரை பூக்கும்போதும்
கரை தழும்பி நிற்கும்போதும்
கன்னி பெண்கள் குளிக்கும்போதும்
கெளுத்தி மீனை வெள்ளை கொக்கு
கொத்திகொண்டு பறக்கும்போதும்
குளம் அழகு

மேகம் கருக்கும்போதும்
மின்னல் சிரிக்கும்போதும்
மண் வாசம் வீசும்போதும்
இடிகொண்டு பேசும்போதும்
முத்து மழைத்துளி ஒன்று
என்னை முத்தமிடும்போதும்
சாரல் வரும் என்று
சன்னல் சாத்தும்போது
சாரம் வழியாக வழிந்து வந்து
சண்டை பிடிக்கும்போதும்
மழை அழகு

கனவிலே சிரிக்கும்போதும்
காலால் உதைக்கும்போதும்
பசி வந்தால் அழும்போதும்
முட்டி,முட்டி பால்
குடிக்கும்போதும்
தொட்டிலில் கிடக்கும்போதும்
தொல்லை பல கொடுக்கும்போதும்
குழந்தை அழகு

தேரில் வரும் தேவதையாய் அவள்
தெருவில் வரும்போதும்
பச்சரிசி மாவிடித்து
கோலமிடும் போதும்
பாவாடை தாவணியில் வந்து
பட்டாசு கொளுத்தும்போதும்
மயில் தோகை கூந்தலுக்கு
சிக்கெடுக்கும்போதும்
மல்லிகை பூ சூடும்போதும்
மஞ்சலரைத்து பூசும்போதும்
கோபமாய் முறைக்கும்போதும்
கொஞ்சி விளையாடும்போதும்
செல்லமாய் சிணுங்கும்போதும்
சின்னதாய் சிரிக்கும்போதும்
போதும்! போதும்!!
நீ மட்டும் போதும் என்னவளே!
நீ தான் பேரழகு



1 comment: